நைஜீரியா நாட்டில் உள்ள பிளேட்டூ மாகாணத்தில், இரு பழங்குடியின குழுக்களுக்கு இடையே கடந்த 3 நாட்களாக மோதல் நிகழ்ந்து வருகிறது. கால்நடைகளை மேய்க்கும் பழங்குடியின குழு, விவசாயம் மேற்கொள்ளும் மற்றொரு பழங்குடியின குழுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், இரு குழுக்களும் பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் தொடர் கொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திங்கள்கிழமை முதல் நேற்று வரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 85 ஆக சொல்லப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் தங்கள் கொலை நடவடிக்கையை நிறுத்தாத வரை, பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.