‘மேன்டூஸ்' புயல் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று இரவு பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அனைத்து அலுவலர்களும் மாவட்ட தலைமையிடங்களில் பணியில் இருக்க வேண்டும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் கரையைக் கடக்கும் நிலையில், இரவுப் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்கள் மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.