கேரளாவில் கடந்த சில மாதங்களாக பல்வேறு காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில் நிபா வைரஸ் தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
கேரளாவில் கடந்த சில மாதங்களாக டைபாய்டு, டெங்கு, எலி மற்றும் பன்றி காய்ச்சல்கள் மட்டுமின்றி அமீபா, ஷிகல்லா, மூளைக்காய்ச்சல் போன்ற அரியவகை நோய்களும் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரஸிற்கு 14 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து நிபா வைரஸ் பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் பரவல் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் இதுவரை 26 ஆயிரத்து 430 வீடுகளில் காய்ச்சல் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளது.