கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வந்ததால் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
கேரளாவில் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பிற்கு ஆறு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, பள்ளி கல்லூரிகள் விடுமுறை, டியூஷன் மற்றும் பயிற்சி நிலையங்கள் மூடுவது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் தொற்று நோய் பாதித்த பகுதிகளாக 100க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொற்று பாதிதவர்களின் உறவினர்களுக்கு நிபா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் 9 பஞ்சாயத்துக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவை வாபஸ் பெறப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து பகுதியில் கடைகள் மற்றும் சந்தைகள் நிறைவு எட்டு மணி வரை செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.