முதல்வர் ஸ்டாலினுடன் நிதி ஆயோக் குழு சந்திப்பில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, நிதிஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் சுமன் குமார் பெர்ரி மற்றும் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவினர் சந்தித்தனர். அந்த அமைப்பின் முக்கிய முயற்சிகளான நீடித்த வளர்ச்சி இலக்குகள், முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டம் ஆகியவை குறித்து கலந்தாலோசித்தனர்.
இந்தச் சந்திப்பில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதி ஆயோக் ஆலோசகர் பார்த்தசாரதி ரெட்டி, துணைத்தலைவரின் தனிச்செயலர் ஏ.முத்துக்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.