மத்திய அரசு டீசல் வாகனத்திற்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி வரியை உயர்த்த முடிவு நிதின் கட்காரி விளக்கம்.
இந்தியாவில் டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதலாக ஜிஎஸ்டி வரி வசூலிக்க இருப்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்தது. இதற்கு அமைச்சர் நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை மறுத்து நிதின் கட்காரி மாசு வரி என்ற பெயரில் கூடுதல் ஜி.எஸ்.டி வசூலிக்க இருப்பதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.