பிரதமர் மோடி சிட்னிக்கு வருவதில் மாற்றமில்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அடுத்த வாரம் நடைபெறுவதாக இருந்தது. இந்த உச்சி மாநாட்டில் நமது பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் நிலவி வரும் கடன் உச்சவரம்பு நெருக்கடி காரணமாக ஜனாதிபதி ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதையடுத்து குவாட் உச்சி மாநாட்டை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் அறிவித்தார். மேலும் குவாட் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டாலும், இந்திய பிரதமர் மோடியும், ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவும் அடுத்த வாரம் சிட்னிக்கு வருவதில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. நிச்சயமாக பிரதமர் மோடி இங்கு மிகவும் வரவேற்கப்படுவார். அவருடன் இருதரப்பு சந்திப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.