நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8ம் தேதி விவாதம்

August 1, 2023

மணிப்பூர் விவகாரத்தில், ஆளும் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது, வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 10ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இது பற்றிய பதில்களை அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், […]

மணிப்பூர் விவகாரத்தில், ஆளும் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது, வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 10ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இது பற்றிய பதில்களை அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, நாடாளுமன்றத்தின் அலுவல் நாட்கள் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், ஆகஸ்ட் 11ஆம் தேதி உடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் பதிலளிக்க கோரி அவர்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu