இந்தியாவுக்கு கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இலங்கையில் இழுவைமடி மீன் படகு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் இத்தகைய படகுகளை வைத்து இலங்கை கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர். இவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. மேலும் இலங்கை மீனவர்களின் கடல் தொழில் உபகரணங்கள் பாதிப்படுகின்றன. இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் மூலமே கச்சத்தீவு கிடைத்தது. எனவே அதனை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று ஆகும். அப்படி கச்சத்தீவை திரும்ப வழங்கினால் இலங்கையின் கடல் வளம் முற்றிலும் சூறையாடப்படும் என்று கூறினார்.