கோவாக்சின் தடுப்பு மருந்தை அரசியல் அழுத்தம் காரணமாக அவசரகதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாக வெளியாகி உள்ள தகவலை பாரத் பயோடெக் நிறுவனம் மறுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்குதல் உச்சத்தில் இருந்தபோது, அதற்கான தடுப்பூசியை தயாரிப்பதில் ஒன்றிய அரசு தீவிர முனைப்பு காட்டியது. அதன் காரணமாக, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான கோவாக்சின் தடுப்பூசியும் வேகமாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.
இந்நிலையில், அரசியல் ரீதியாக கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே, பல்வேறு முக்கிய பரிசோதனைகளை செய்யாமல் கோவாக்சின் தடுப்பூசி அவசரகதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. இதை பாரத் பயோடெக் நிறுவனம் மறுத்துள்ளது.