பிணைய கைதிகளை விடுவிக்க கோரி காசாவுக்கு தண்ணீர் நிறுத்தம் - இஸ்ரேல்

October 13, 2023

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பணைய கைதிகளை விடுவிக்கும் வரை காசாவுக்கு அடிப்படை தேவைகள் அளிக்கப்பட மாட்டாது என இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் உறுதியாக கூறியுள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினை சேர்ந்தவர்களை முற்றிலும் அழிக்கப் போவதாக கூறியுள்ளது. இதனால் காசா பகுதியில் அந்த அமைப்பை சேர்ந்தவர்களை தேடி கொன்று வருகிறது. இந்த போர் தொடங்கி ஒரு வார காலம் ஆகிவிட்டது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. குண்டு […]

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பணைய கைதிகளை விடுவிக்கும் வரை காசாவுக்கு அடிப்படை தேவைகள் அளிக்கப்பட மாட்டாது என இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் உறுதியாக கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினை சேர்ந்தவர்களை முற்றிலும் அழிக்கப் போவதாக கூறியுள்ளது. இதனால் காசா பகுதியில் அந்த அமைப்பை சேர்ந்தவர்களை தேடி கொன்று வருகிறது. இந்த போர் தொடங்கி ஒரு வார காலம் ஆகிவிட்டது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. குண்டு மழைகள் பொழிகிறது. இதனால் அப்பகுதியில் வீடுகள் சேதம் அடைந்து வருகின்றன. அங்குள்ள மக்கள் அருகில் உள்ள அரபு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல லட்சம் மக்களுக்கு குடிநீர், மின்சாரம், எரிபொருள், மருந்து பொருட்கள் என அனைத்து வசதிகளையும் இஸ்ரேல் துண்டித்து விட்டது. குண்டு வீச்சில் காயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு அவசர தேவைகள் அளிக்க வேண்டும் என்று மனிதனை அமைப்புகள் இஸ்ரேலுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. எனினும் இதனை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பணைய கைதிகளை விடுவிக்கும் வரை காசாவுக்கு அடிப்படை தேவைகள் அளிக்கப்பட மாட்டாது என இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் உறுதியாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து எங்களுக்கு யாரும் அறிவுரை கூற வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 150 இஸ்ரேலியர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu