பள்ளி கல்விக்கான புதிய தேசிய கல்விக் கொள்கை முன்வரைவில் 2ம் வகுப்பு வரையிலும் எழுத்து தேர்வுகள் இருக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு புதிய தேசிய கல்விக் கொள்கையை தயாரித்துள்ளது. பள்ளி கல்விக்கான முன்வரைவை ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. அதில் 2ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தேர்வுகள் போன்றவை பொருத்தமற்ற மதிப்பீட்டு முறைகளாகும். இது குழந்தைகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். 3ம் வகுப்பிலிருந்து எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கலாம் என ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.