ஈரானைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நர்கிஸ் முகமதிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடி வருபவர் நர்கிஸ் முகமதி ஆவார். அவர் ஒட்டுமொத்த மனிதர்களுக்கான சுதந்திரம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுவது ஆகியவற்றை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் இருக்கும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர் 13 முறை கைது செய்யப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். ஈரான் நாட்டு வழக்கப்படி அவருக்கு 154 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதன் மூலம், அவர் சர்வதேச கவனம் பெற்றுள்ளார்.