2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை நோபல் அகாடமி அறிவித்தது.
இது கிளாடியா கோல்டின் என்ற பெண்மணிக்கு வழங்கப்படுகிறது. இவர் பாலின இடைவெளியின் முக்கிய ஆதாரங்களை ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்காகவும் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நோபல் அகாடமி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வேதியல், இயற்பியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த பணி கடந்த இரண்டாம் தேதி முதல் தொடங்கியது.