வங்கதேசத்தை சேர்ந்த முகமது யூனுஸ், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்றவர் ஆவார். வங்கதேசத்தில் கிராமின் கம்யூனிகேஷன்ஸ் என்ற பெயரில் வங்கிச் செயல்பாடுகளை தொடங்கிய அவர், கிராமப்புற மேம்பாடு மற்றும் தொழில் முனைவோருக்கு அதிக கடன்கள் வழங்கினார். இதன் மூலம், வங்கதேசத்தின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இதற்காக, அவருக்கு 2006 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவர் தொழிலாளர் சட்ட விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு கடன் உதவிகள் வழங்கிய யூனுஸ், அரசியலிலும் நுழைந்தார். அதன் பிறகு, அவர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் இவர் மீது கடுமையான குற்றங்களை சாட்டியுள்ளனர். வழக்கின் தீர்ப்பை எதிர்த்து யூனுஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.