ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது 5G ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் (RAN) உபகரணங்களை வாங்குவதற்கு சப்ளையராக நோக்கியா நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக நோக்கியா தனது அறிக்கையில் ௯றியுள்ளது.
நோக்கியா அதன் விரிவான ஏர்ஸ்கேல் போர்ட்ஃபோலியோவில் இருந்து 5G ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் (RAN) உபகரணங்களை நாடு முழுவதும் வழங்குவதற்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது ஜியோ தனது 4ஜி நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படக் ௯டிய, 5ஜி தனி நெட்வொர்க்கை கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், நோக்கியாவானது , பல்வேறு ஸ்பெக்ட்ரம் பட்டைகள் மற்றும் சுய-ஒழுங்குபடுத்தும் நெட்வொர்க் மென்பொருளை ஆதரிக்கும் நிலையங்கள், அதிக திறன் கொண்ட 5G மாசிவ் MIMO ஆண்டெனாக்கள் மற்றும் ரிமோட் ரேடியோ ஹெட்ஸ் (RRH) உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும். அதன்மூலம் நெட்வொா்க் 5G தன் சேவையிலிருந்து இயந்திரத் தொடர்புகள், நெட்வொர்க் ஸ்லைசிங் மற்றும் வேகமான இணைப்பு போன்றவற்றை வழங்க உதவும்.
இது குறித்து ௯றிய ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் அம்பானி, ஜியோ தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய நெட்வொர்க் தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்யும். அந்தவகையில் 5G SA வரிசைப்படுத்தலுக்காக நோக்கியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது என்று கூறினார். ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த நோக்கியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பெக்கா லுண்ட்மார்க், இந்த திட்டம் இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்களுக்கு பிரீமியம் 5G சேவைகளை அறிமுகப்படுத்தும் என்றார். மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ உள்ளிட்ட இந்தியாவின் மூன்று முன்னணி மொபைல் ஆபரேட்டர்களுக்கு நோக்கியா இப்போது சப்ளையர் ஆகிறது என்றும் கூறினார்.