நோக்கியா எக்ஸ் 30 5ஜி - உலகின் மிகவும் சுற்றுச்சூழல் மாசு இல்லாத கைபேசி அறிமுகம்

நோக்கியா நிறுவனத்தின் புதிய எக்ஸ் 30 5ஜி கைபேசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கைபேசி, முழுக்க முழுக்க மறுஆக்கம் செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 100% மறு ஆக்கம் செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் 65% மறுஆக்கம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஆகியவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இது, ‘உலகின் மிகவும் சுற்றுச்சூழல் மாசு இல்லாத கைபேசி’ என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த கைபேசியின் விலை 48999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கைப்பேசியில் பல நவீன […]

நோக்கியா நிறுவனத்தின் புதிய எக்ஸ் 30 5ஜி கைபேசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கைபேசி, முழுக்க முழுக்க மறுஆக்கம் செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 100% மறு ஆக்கம் செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் 65% மறுஆக்கம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஆகியவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இது, ‘உலகின் மிகவும் சுற்றுச்சூழல் மாசு இல்லாத கைபேசி’ என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த கைபேசியின் விலை 48999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கைப்பேசியில் பல நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 6.43 இன்ச் முழு HD+ (1080x2400) AMOLED Corning Gorilla Glass Victus பிளேட் ஸ்க்ரீன் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 50 மெகாபிக்சல் கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், நைட் செல்ஃபி அம்சத்துடன் கூடிய 16 மெகாபிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி சேமிப்பு திறன் கொண்டுள்ள இந்த கைபேசி, ஆண்ட்ராய்டு 12 ல் இயங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும், 4200 mAh பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த கைபேசியில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu