ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல், நாளை தொடங்குகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா., மறைவை தொடர்ந்து, பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.க., கூட்டணி சார்பில், காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., சார்பில் வேட்பாளரை நிறுத்தப் போவதாக பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தனித்தனியே அறிவித்துள்ளனர்.
தே.மு.தி.க., சார்பில் அக்கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலர் ஆனந்த் களமிறக்கப்பட்டுள்ளார். தினகரனின், அ.ம.மு.க., சார்பில் சிவபிரசாத் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நேற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் நாளை துவங்கவுள்ளது.