இணைய வாக்குப்பதிவு முறையில் வெளிநாடுவாழ் இந்தியர்களும் வாக்களிக்க ஆலோசனை

March 17, 2023

இணைய வாக்குப்பதிவு முறையில் வெளிநாடுவாழ் இந்தியர்களும் வாக்களிக்க ஆலோசனை நடத்தி வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி வெளிநாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 1.15 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இணைய முறையில் அனுப்பப்படும் அஞ்சல் வாக்குச் சீட்டு முறையை எளிதாக்குவதற்காக, தேர்தல் நடத்தை விதிகள், 1961-ல் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவை இந்தியத் தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது. […]

இணைய வாக்குப்பதிவு முறையில் வெளிநாடுவாழ் இந்தியர்களும் வாக்களிக்க ஆலோசனை நடத்தி வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி வெளிநாட்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 1.15 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இணைய முறையில் அனுப்பப்படும் அஞ்சல் வாக்குச் சீட்டு முறையை எளிதாக்குவதற்காக, தேர்தல் நடத்தை விதிகள், 1961-ல் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவை இந்தியத் தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசனை நடந்து வருகிறது என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu