நார்ட் ஸ்ட்ரீம் பைப்லைன் கசிவுகள் திட்டமிடப்பட்ட நாசவேலை என ஸ்வீடிஷ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பால்டிக் கடலுக்கு அடியில் ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்கிறது நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்கள். செப்டம்பர் இறுதியில் டேனிஷ் தீவான போர்ன்ஹோமில் இருந்து நோர்ட் ஸ்ட்ரீமின் இரண்டு குழாய்களில் நான்கு பெரிய எரிவாயு கசிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்பு ரஷ்யாவை ஜெர்மனியுடன் இணைக்கும் இந்த குழாய்கள் அரசியல் பதட்டங்களின் காரணமாக மாறியது.
ரஷ்யா உக்ரைன் ஆக்கிரமிப்பு மீதான மேற்கத்திய தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை குறைத்தது. அதன் பின்பு செப்டம்பர் மாதம் அப்பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக குழாய்களில் கசிவுகள் ஏற்பட்டது. கசிவு ஏற்பட்டபோது குழாய்கள் செயல்பாட்டில் இல்லாவிட்டாலும், அவை இரண்டிலும் வாயு இருந்தது. அது கடலின் வழியாகவும் வளிமண்டலத்திலும் வெளியேறியது.
இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களின் பகுதிகளை அழித்த குண்டுவெடிப்பு செயல் ஒரு நாசவேலை என்று ஸ்வீடிஷ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினர். இப்பொது நடத்தப்பட்ட ஆய்வுகள் குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் பல வெடிபொருட்களின் தடயங்களைக் கண்டறிந்துள்ளது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளன.