டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நொய்டா பகுதிகளிலும் பெய்து வரும் கனமழையின் காரணமாக மக்களை இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், குஜராத் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் சில பகுதிகளிலும் இன்று கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோன்று இமாச்சல பிரதேசத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைவாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.