கொரோனா பரவல் தொடங்கிய 2020 ஆம் ஆண்டு முதல், வடகொரியாவுக்குள் நுழைய வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்நாட்டுக்குள் வெளிநாட்டினர் நுழைய மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வடகொரியா பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.வரும் திங்கட்கிழமை முதல் வடகொரியாவுக்குள் வெளிநாட்டினர் அனுமதிக்கப்படுகின்றனர். சீனாவின் தேசிய தொலைக்காட்சி CCTV இந்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும், அங்கு செல்லும் நபர்கள் 2 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என கூறியுள்ளது. ஆனால், வடகொரியாவின் தேசிய ஊடகம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.