வடகொரியா, தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை தயாரித்து உள்ளதாக கூறியுள்ளது. மேலும், இதற்கு அந்நாட்டின் அதிபர் கிம் ஜான் உன் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், தற்போது அதனை பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக, வடகொரியாவில், செயற்கைக்கோள் ஏவுதளம் அவசர கால அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
வர்த்தக செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படத்தின் அடிப்படையில், வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில், செயற்கைக்கோள் ஏவு தளம் வேகமாக கட்டமைக்கப்பட்ட வருவதாக, அமெரிக்காவைச் சேர்ந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, 2 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை வடகொரியா வெற்றிகரமாக நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், ராணுவ உளவு செயற்கைக்கோளும் வெற்றிகரமாக நிறுவப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.