அமெரிக்காவின் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தென்கொரியாவுக்கு வருகை தந்துள்ளார். சியோல் நகரத்திற்கு அவர் வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா பலமுறை ஏவுகணை சோதனை நிகழ்த்தி உள்ளது.
இன்று காலை முதலே, வட கொரியா பலமுறை ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தியுள்ளது. குறுகிய தொலைவுக்கு சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா ஏவியதாக சொல்லப்பட்டுள்ளது. இன்று காலை 7:44 மணி அளவில் 2 ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன. அதிலிருந்து 40 நிமிடங்களுக்குள் மற்றொரு ஏவுகணை சோதனை நடைபெற்றது. இவ்வாறு ஜப்பான் நாடு தெரிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.