தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இன்றோடு 10 நாள் ராணுவ ஒத்திகை நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், இந்த ஒத்திகையை எதிர்த்து வடகொரியா பல ஏவுகணைகளை வீசி உள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை காலை மேற்கு கரையிலிருந்து மஞ்சள் கடல் பகுதியில் பல ஏவுகணைகள் வீசப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அணு ஆயுத ஏவுகணைகள் அல்லாமல் வேறு ஏவுகணைகள் சோதனை செய்வது சர்வதேச விதிகளின்படி குற்றமல்ல; ஆனாலும் வடகொரியா வேறு பல ஏவுகணைகளை வீசியதாகவும் தென் கொரியா குற்றம் சுமத்தி உள்ளது. தென்கொரியாவுடன் இணைய போவதில்லை என வடகொரியா தெரிவித்துள்ள நிலையில், தொடர் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.