வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - தென்கொரியா அறிவிப்பு

December 18, 2023

வடகொரியா இன்று குறைந்தபட்சம் ஒரு ஏவுகணை சோதனை நிகழ்த்தி உள்ளதாக தென்கொரிய ராணுவம் அறிவித்துள்ளது. நேற்று இரவு சிறிய தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து, இன்று மேலும் ஒரு ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கிழக்குப் பகுதியில் உள்ள ஜப்பான் கடற்பரப்பில் இந்த ஏவுகணைகள் விழுந்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் எக்ஸ் பக்கத்திலும், வடகொரியா ஏவுகணை சோதனை நிகழ்த்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த […]

வடகொரியா இன்று குறைந்தபட்சம் ஒரு ஏவுகணை சோதனை நிகழ்த்தி உள்ளதாக தென்கொரிய ராணுவம் அறிவித்துள்ளது.

நேற்று இரவு சிறிய தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து, இன்று மேலும் ஒரு ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கிழக்குப் பகுதியில் உள்ள ஜப்பான் கடற்பரப்பில் இந்த ஏவுகணைகள் விழுந்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் எக்ஸ் பக்கத்திலும், வடகொரியா ஏவுகணை சோதனை நிகழ்த்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை, 570 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணித்ததாக கருதப்படுகிறது. இது பற்றிய தகவல்களை ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ரகசியமாக பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வடகொரிய அதிபரின் தந்தை இறந்த தினத்தன்று இந்த ஏவுகணை சோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu