அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்க வேண்டும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் கூறினார்.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை தென்கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் நடத்தியுள்ளது. இதனால் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் உள்ளதாக கருதுகின்றன. இதனால் இந்த இரு நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சி இல்லாமல் போது ஈடுபட்டு வருகின்றன.
இந்த போர் பயிற்சி ஆனது அந்த நாலு நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை வளர்த்து வருவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் குற்றம் சாட்டினார். தங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் இந்த அச்சுறுத்தலை கைவிட வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கிம் ஜாங் அன் ரஷ்ய சுற்றுலா பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் அதிபர் புதின் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். இதனால் இரு நாடுகளிடையே ஆயுத ஒப்பந்தம் நடைபெற்று இருக்கலாம் என தென்கொரியா குற்றம் சாட்டியது.இந்நிலையில், வடகொரியாவில் பாராளுமன்றம் கூடியது. இதில் கிம் ஜாங் உன் பேசுகையில் உலகம் பனி போரில் ஈடுபட்டு வருகிறது. இதில் அமெரிக்காவை எதிர்கொள்ளும் அணியில் வடகொரியா முக்கிய பங்கு ஆற்றும். எனவே அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம் எனக் கூறினார். இதனால் அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.