கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அத்துடன், இம்மாத இறுதியில், பிரமாண்ட ராணுவ ஒத்திகை நிகழ்த்தவும் திட்டமிட்டுள்ளன. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அதனை எதிர்க்கும் விதமாக, ஏவுகணை சோதனைகளை அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில், இந்த வாரத்தில் இரண்டாம் முறையாக ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. இது கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
வடகொரியா நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள போதும், சீரமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தாமல், ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மேலும், இது தொடர்பாக ஐநாவின் அறிவிப்பை மீறி வடகொரியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.