வடகொரியாவின் ஏவுகணையால் ஜப்பானில் குழப்பம்

April 13, 2023

வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானில் விழலாம் என்று சொல்லப்பட்டதால், அந்நாட்டில் குழப்பம் மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானின் கிழக்குக் கடற்கரை பகுதியில் விழுந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. இன்று காலை, வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது. இந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில் விழலாம் என்று கூறப்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த ஜப்பான் அரசு, அப்பகுதி மக்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியது. மேலும், குடியிருப்புகளின் அடித்தளத்தில் சென்று பதுங்கிக் கொள்ளுமாறு மக்களுக்கு கூறப்பட்டது. […]

வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானில் விழலாம் என்று சொல்லப்பட்டதால், அந்நாட்டில் குழப்பம் மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானின் கிழக்குக் கடற்கரை பகுதியில் விழுந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இன்று காலை, வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது. இந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில் விழலாம் என்று கூறப்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த ஜப்பான் அரசு, அப்பகுதி மக்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியது. மேலும், குடியிருப்புகளின் அடித்தளத்தில் சென்று பதுங்கிக் கொள்ளுமாறு மக்களுக்கு கூறப்பட்டது. மேலும், இந்த ஏவுகணை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக ஜப்பான் தெரிவித்தது. இந்நிலையில், ஏவுகணை கடலில் விழுந்தது தெரிய வந்ததால், மக்களை வெளியேறக் கூறிய உத்தரவை ஜப்பான் அரசு திரும்பப் பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu