வட கொரியாவின் செயற்கைக்கோள் ஏவுதல் முயற்சி தோல்வியடைந்தது.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொள்கிறது. தென்கொரியாவை கண்காணிக்கும் வகையில் தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்று பாதைக்கு கடந்த நவம்பர் மாதம் அனுப்பியது. அவ்வப்போது போர் ஒத்திகை நிகழ்ச்சிகளில் ஈடுபடுகிறது. வரும் மூன்றாம் தேதி இரண்டாவது ராணுவ உளவு செயற்கைக்கோளை வடகொரியா ஏவ திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் கூறியிருந்தது.
இந்நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திவிட்டதாக தகவல் வெளியாகி வந்தது. இதனிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை கடல் பகுதியில் நடுவானில் வெடித்து சிதறி விழுந்ததாக தென்கொரியா கூறியுள்ளது. வடகொரியாவின் புதிய செயற்கைக்கோளை சுமந்து சென்ற ராக்கெட் நடுவானில் வெடித்ததால் ஏவுதல் முயற்சி தோல்வி அடைந்தததாக செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.