வடகொரியா அணு ஆயுத ஏவுகணைகளுக்கு மிகவும் பிரபலமானது. அந்த வகையில், அந்நாட்டின் ராணுவம் தொடங்கப்பட்ட 75 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு நடைபெற்ற, இரவு நேர ராணுவ அணிவகுப்பில் அந்நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு அணு ஆயுத ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ராணுவ அணிவகுப்பில், அந்நாட்டின் அதிபர் கிம் ஜான் உன் அவரது மகளுடன் கலந்து கொண்டார். இந்த அணிவகுப்பில், 11 Hwasong-17s என்ற ஏவுகணை முத்தாய்ப்பாக காட்சிப்படுத்தப்பட்டது. உலகின் எந்தப் பகுதியையும் இந்த ஏவுகணை மூலம் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், அங்கு காட்சிப்படுத்தப்பட்ட அணு ஆயுதங்களின் எண்ணிக்கை பிரமிக்க வைப்பதாக உள்ளது என்று அங்கீத் பாண்டா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய அமெரிக்காவை முழுவதுமாக அளிக்கும் சக்தி படைத்ததாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், பல புதிய ஏவுகணைகள் இந்த அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன், திரவ எரிபொருள் அல்லாது திண்ம எரிபொருளால் இயக்கப்படும் அணு ஆயுதம் மற்றும் சிறிய அளவிலான அணு ஆயுதம் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் வடகொரியா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.