வடகொரியா ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடைசியாக கடந்த மாதம் 19-ந் தேதி அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய 'ஹவாசோங்-17' என்கிற ஐசிபிஎம் ஏவுகணையை வடகொரியா சோதித்தது. அதன் பிறகு எந்தவொரு ஏவுகணை சோதனையையும் வடகொரியா நடத்தவில்லை.
இந்த நிலையில் வடகொரியா நேற்று ஒரே நாளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்தது. சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் வடகொரியா அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவி சோதித்ததாகவும், அந்த ஏவுகணைகள் கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையில் கடலில் விழுந்ததாகவும் தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.