கிழக்கு கடல் பகுதியை நோக்கி 2 ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்தது

February 20, 2023

வடகொரியா கிழக்கு கடல் பகுதியை நோக்கி இன்று குறுகிய தொலைவு செல்ல கூடிய 2 ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் வடகொரியா ஏவிய கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை பரிசோதனை பரபரப்பு ஏற்படுத்தியது. வடகொரியா ஏவிய ஏவுகணை, ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளது என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறினார். இந்த ஏவுகணை சோதனையானது வடகொரியாவின் எதிர் தாக்குதல் திறனுக்கு ஒரு சிறந்த […]

வடகொரியா கிழக்கு கடல் பகுதியை நோக்கி இன்று குறுகிய தொலைவு செல்ல கூடிய 2 ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்து உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் வடகொரியா ஏவிய கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை பரிசோதனை பரபரப்பு ஏற்படுத்தியது. வடகொரியா ஏவிய ஏவுகணை, ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளது என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறினார். இந்த ஏவுகணை சோதனையானது வடகொரியாவின் எதிர் தாக்குதல் திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனவும், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வகையிலான ஏவுகணை முழு திறனை எட்டியுள்ளது என்றும் வடகொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்தே உடனடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து போர் பயிற்சிகளில் நேற்று ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில், வடகொரியா இன்று 2 ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி உள்ளது. இந்த ஆண்டில் எதிரி நாடுகளை தூண்டி விடும் வகையில், வடகொரியா மேற்கொள்ளும் 3-வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu