வடகொரியா இரண்டம் நாளாக தொலை தூர ஏவுகணை சோதனை நடத்தியது.
வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தாலும் அதை கண்டுகொள்ளாமல் கிம் ஜாங் அன் அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவை தாக்கும் வகையில் நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையை வடகொரியா பரிசோதன்னை செய்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் இந்த சோதனை நடைபெற்றதாக வடகொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணையாக இது இருக்கலாம் என்று செய்தி வந்துள்ளது.
இந்த ஏவுகணை ஜப்பான் பிரத்தியேக பொருளாதார மண்டலம் பகுதியில் விழுந்தது என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது போன்ற செயல்களை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.