உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, வடகொரியா நாடு, ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. கடந்த சில தினங்களாக சோதனைகள் நடத்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று, வடகொரியா 2 ஏவுகணை சோதனைகள் நடத்தியுள்ளது. கிழக்கு கடல் பகுதியில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த 2 ஏவுகணைகளும் குறுகிய தொலைவு தூரம் சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் உள்ளவை என்று தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டு வந்தன. ஜப்பான் நாடும் இவர்களுடன் இணைந்து ஒத்திகையில் களமிறங்கியது. ஒத்திகைகள் நிறைவடைந்த நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.