சர்வதேச எதிர்ப்புகளை மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதத்தில் மூன்றாவது முறையாக, நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
நேற்றைய தினம் ஒன்றுக்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நிகழ்த்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. மேலும், கடலில் விழுந்த ஏவுகணைகளை சோதனை செய்து, அவற்றைப் பற்றிய கூடுதல் விவரங்களை தென் கொரியா சேகரித்து வருகிறது. ஜனவரி மாதத்தில் அமெரிக்கா உடன் கூட்டு ராணுவ பயிற்சியில் தென்கொரியா ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.