வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுதம் வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி செய்து வருகின்றன. அதேபோல், ரஷ்யாவிற்கு வடகொரியா, சீனா, ஈரான் போன்ற நாடுகள் உதவி வருகின்றன. இந்த உதவிகளை அவர்கள் வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை என்ற போதிலும் இந்த மூன்று நாடுகளுக்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தது. இந்நிலையில், வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்க ஒப்புக்கொண்டதாக தகவல் வந்தது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ள அறிக்கையில் வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத கப்பலை அமெரிக்கா நிறுத்திய விவாகரத்தில், வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பதால் அந்நாட்டு ராணுவத்தை தயார் நிலையில் இருக்கும்படி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் கேட்டுக்கொண்டார். அதோடு நிறுத்தாமல் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளையும் வட கொரியா நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.