உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியா 1,500 வீரர்களை அனுப்பியுள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது. இதன் மூலம் வட கொரியா தனது அணு ஆயுத தொழில்நுட்பத்தை மேம்படுத்திக்கொள்ள ரஷ்யாவிலிருந்து உதவிகள் பெறலாம் என்ற அச்சம் தென் கொரியாவுக்கு உள்ளது. எனவே, வட கொரியா தனது நடவடிக்கைகளை நிறுத்தி, உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட வீரர்களை திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும் என தென் கொரியா வலியுறுத்தி வருகிறது. மேலும், இது உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரசியாவுக்கு 10000 வீரர்களை அனுப்ப உள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 3000 வீரர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்புத் துறை இது உண்மைதான் என்று கூறியுள்ளது.














