வடகொரியா தொடர்ந்து ஆயுத மேம்பாடுகளை மேற்கொள்வதால், அப்பகுதியில் அமெரிக்க ராணுவம் வலுப்பெற வழிவகுக்கும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்க உள்ளார்.
இந்தோனேசிய தீவான பாலியில் G20 நாடுகளின் குழுமத்தின் உச்சிமாநாட்டில் தேசியத் தலைவர்களாக பிடன் மற்றும் ஜி ஜின்பிங் தங்கள் முதல் நேருக்கு நேர் சந்திப்பை நடத்த உள்ளனர். அப்போது இது குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என தெரிகிறது.
2017 க்குப் பிறகு முதல் முறையாக வட கொரியா அணுகுண்டு சோதனையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. சீனாவும் ரஷ்யாவும் அதனை தடுக்கும் சக்தியைக் கொண்டுள்ளன என்று நம்புகிறது. இது குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு மட்டுமல்ல, முழு பிராந்தியத்திலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வட கொரியா ஒரு அச்சுறுத்தலைப் உண்டாக்குகிறது என்று பிடன் சீன அதிபரிடம் கூறுவார் என்றார்.