மிச்சாங் புயலுக்கு பின்னர் சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவை நேற்று மாலை முதல் தொடங்கியுள்ளது.
சென்னையில் மிச்சாங் புயல் காரணமாக போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு மற்றும் வெளி ஊர்களில் இருந்து சென்னைக்கும் பயணிகள் பயணம் செய்ய இயலாமல் தவிர்த்து வந்தனர். மேலும் சொந்த ஊருக்கு செல்ல முடியாத பயணிகள் ரயில் நிலையங்களிலேயே தஞ்சம் அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று சென்னை சென்ட்ரலில் இருந்து புது டெல்லிக்கு செல்லும் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 6:40 மணிக்கு புறப்பட்டது.