வடகிழக்கு பருவமழை நாளையுடன் முடிவடைகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு சற்று தாமதமாக அக்டோபர் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 44.3 செ.மீ. ஆனால் தற்போது ஒரு சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் அதை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து நாளை (12-ந்தேதி) விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.