தஞ்சை மற்றும் சில மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மாதம் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 11 மணி அளவில் மழை ஆரம்பமாகி, இன்று முழுவதும் கனமழை தொடர்கின்றது. இதனால், தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.