தென்னிந்திய பகுதிகளில் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை வரும் 15-ம் தேதியுடன் விலக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 21ஆம் தேதி முதல் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கியது. இது தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதியுடன் விலக கூடிய சூழல் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.