தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்.29ம் தேதியை ஒட்டி தொடங்கக்கூடும்: வானிலை மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் 

October 26, 2022

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்.29ம் தேதியை ஒட்டி தொடங்கக்கூடும் என்று வானிலை மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் அறிவித்துள்ளார். அக்டோபர் 29,30 தேதிகளில் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக […]

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்.29ம் தேதியை ஒட்டி தொடங்கக்கூடும் என்று வானிலை மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் அறிவித்துள்ளார்.

அக்டோபர் 29,30 தேதிகளில் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். அக்.30ல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்.29ம் தேதியை ஒட்டி தொடங்கக்கூடும் என்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu