வடகிழக்கு மாநில தலைநகரங்கள் 2025-ம் ஆண்டுக்குள் வான், தரை வழியே இணைக்கப்படும் - அமித்ஷா 

வடகிழக்கு மாநில தலைநகரங்கள் 2025-ம் ஆண்டுக்குள் வான், தரை வழியே இணைக்கப்படும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். மிசோரம் மாநில பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வடகிழக்கு மாநிலத்தின் 8 தலைநகரங்களும் 2025-ம் ஆண்டுக்குள் வான், ரெயில் மற்றும் தரை வழியே இணைக்கப்படும் என உறுதியளித்து உள்ளார். ஒரு காலத்தில் இந்த பகுதியில் அமைதியின்மையும், வன்முறையும் காணப்பட்டது. ஆனால் இன்று முதல்-மந்திரியாக ஜொரம்தங்கா ஆட்சி செய்து வருகிறார். இந்தியாவில் […]

வடகிழக்கு மாநில தலைநகரங்கள் 2025-ம் ஆண்டுக்குள் வான், தரை வழியே இணைக்கப்படும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநில பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வடகிழக்கு மாநிலத்தின் 8 தலைநகரங்களும் 2025-ம் ஆண்டுக்குள் வான், ரெயில் மற்றும் தரை வழியே இணைக்கப்படும் என உறுதியளித்து உள்ளார். ஒரு காலத்தில் இந்த பகுதியில் அமைதியின்மையும், வன்முறையும் காணப்பட்டது. ஆனால் இன்று முதல்-மந்திரியாக ஜொரம்தங்கா ஆட்சி செய்து வருகிறார். இந்தியாவில் ஜனநாயகத்திற்கான ஓர் எடுத்துக்காட்டு இது. மிசோரமில் இன்று அமைதி காணப்படுகிறது என்றார்.

மேலும் வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்காக மோடி அரசானது வடகிழக்கு பகுதிகளுக்கு 276 சதவீதம் பட்ஜெட்டில் நிதியை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu