இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சுடும் பயிற்சி காரணமாக தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும் போதும், இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கி சிறைபிடிக்கும், உபகரணங்களை சேதப்படுத்தும், சில நேரங்களில் துப்பாக்கி சூடும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், தமிழக மீனவர்கள் உயிரின் ஆபத்துகளை தாண்டி கடலுக்கு சென்று வருகின்றனர்.இந்த நிலையில், இன்று (8-ந்தேதி), இலங்கை கடற்படையினர் வடக்கு பிராந்திய கடற்பரப்பில், பருத்தித்துறை கடல் பகுதியில், கடற்படை தளமான பி421 களத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடத்த இருக்கின்றனர். இதில் நூற்றுக்கணக்கான இலங்கை வீரர்கள் பங்கேற்க உள்ளனர், இந்த பயிற்சி மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தபோதிலும், தமிழ்நாட்டின் மீனவர்களுக்கு பாதுகாப்பு கருதி, இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, இலங்கை கடற்பரப்பை ஒட்டிய இந்திய கடல் எல்லைக்கு சென்று மீன்பிடிக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் மீனவர்களிடம், பாதுகாப்பாக இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடிக்குமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.