பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் ஆந்திர மாநிலத்தில் சூடு பறக்க நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து வருகின்றனர். இதில் ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடு மக்களை ஏமாற்றுவதாகவும் மேலும் ஒரு திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரத்தை கூறி சந்திரபாபு நாயுடுவை ஜெகன்மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார். இது தெலுங்கு தேச கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதனால் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக கூறி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 48 மணி நேரத்திற்குள் ஜெகன்மோகன் ரெட்டி இதற்கு பதிலளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.