நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நெல்லையில் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கினை முழுமையாக தாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ள 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் செலவு கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடுமையான எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.