ஆந்திராவில் தனியார் மது கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலத்தில் மது கடைகள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. ஏலத்தின் மூலம் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தற்போது, அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் அதிக விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் அரசு அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மதுக்கடைகளில் கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும், புகாருக்கான கட்டணமில்லா தொலைபேசி வசதியும் ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடைகள் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும், தொடர்ந்து தவறு செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.