பயணிகள் சிரமத்தை தவிர்ப்பதற்காக மின்சார ரயில் டிக்கெட்களை இனி செயலி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில்களில் பயணம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காலை மற்றும் மாலை நேரங்களில் காத்திருந்து எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை சரி செய்வதற்காக ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே இதற்கான டிக்கெட்டுகளை செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி யுடிஎஸ் செயலியில் ஆன்லைனில் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை சிரமமின்றி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்து 2 மணி நேரத்தில் ரயில் நிலையத்தை சென்றடைந்தால் பயணத்தை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.